அமித்ஷா- ஈபிஎஸ் சந்திப்பால் முடிவுக்கு வந்த அதிமுக பாஜக பனிப்போர்?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், தமிழகத்தில் அதிமுக-பாஜக இடையே இருந்துவந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொள்ளாச்சி: தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரச்சனை வெடித்தது.

அதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், அதை தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை இரண்டும் எடப்பாடி பழனிசாமி வசமானது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக கோரிவந்தது. ஆனால், பாஜக தனி வேட்பாளர் பட்டியலை அறிவித்ததைத் தொடர்ந்து, புலிகேசி தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதாக அதிமுக அறிவித்தது. புலிகேசி தொகுதியில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.



இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை வகிப்பது எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிமுக-பாஜக இடையே நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துகொள்வோம் என்றார். ஓ.பி.எஸ் இன்னும் திமுகவின் பி-டீமாகத்தான் இருந்துவருகிறார் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படும் கட்சிகள் எனவும், திமுகவைப் போல் அடிமைக் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து உண்மைத்தன்மையை கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...