உதகையில் நீலகிரி வனத்துறையினருக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம் - ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு!

உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நடைபெற்ற திறன் மேம்பாடு பயிற்சி முகாமில், நீலகிரி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகை அருகே வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீதடுப்பு காவலர்கள், அதிவிரைவு படை பணியாளர்கள் (RRT) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இதில் வன குற்றங்களை கண்டறிதல், வகைப்படுத்துதல், அதனை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்த விவரங்கள் வனப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.



மேலும், வனக்குற்றங்கள், வன உயிரின குற்றங்கள் மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வனப்பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.



பின்னர், Tamilnadu Forest Elite Force, வன உயிர் பயிற்சியகம் மூலம் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு முறைகள், தீ தடுப்பு கருவிகளை கையாளுதல், தீ நிகழ்வுகளின் போது எவ்வாறு செயல்படுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...