உதகையில் நீலகிரி வனத்துறையினருக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம் - ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு!

உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நடைபெற்ற திறன் மேம்பாடு பயிற்சி முகாமில், நீலகிரி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகை அருகே வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீதடுப்பு காவலர்கள், அதிவிரைவு படை பணியாளர்கள் (RRT) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இதில் வன குற்றங்களை கண்டறிதல், வகைப்படுத்துதல், அதனை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்த விவரங்கள் வனப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.



மேலும், வனக்குற்றங்கள், வன உயிரின குற்றங்கள் மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வனப்பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.



பின்னர், Tamilnadu Forest Elite Force, வன உயிர் பயிற்சியகம் மூலம் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு முறைகள், தீ தடுப்பு கருவிகளை கையாளுதல், தீ நிகழ்வுகளின் போது எவ்வாறு செயல்படுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...