உடுமலை ஜல்லிபட்டியில் குளத்தின் கரை, கால்வாய் கரை உடைப்பு - அதிகாரிகள் அலட்சியம்!

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டியில் உள்ள குளத்தின் கரை மற்றும் பிஏபி கால்வாய் கரையை உடைத்து சட்டவிரோதமாக நீரை வெளியேற்றி மீன் பிடிக்கப்பட்டு உள்ளது குறித்து தகவல் தெரிவித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜல்லிப்பட்டியில் சட்டவிரோதமாக குளத்தின் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஜல்லிபட்டியில், 20 ஏக்கர் பரப்பளவில், குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்தாண்டு பெய்த பருவ மழையின் காரணமாக குளம் நிரம்பி காணப்பட்டது.



2 தினங்களுக்கு முன், குளத்தின் கரையை உடைத்தும், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கான்கிரீட் கரையை உடைத்தும், குளத்தில் இருந்த பெருமளவு நீர் முறைகேடாக வெளியேற்றப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற விவசாயிகள், கரை உடைப்பை அடைத்தனர். மேலும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், குளத்தையும், பி.ஏ.பி., கால்வாயையும் உடைத்தவர்கள் மீது, துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.



குளத்தின் கரையை பலப்படுத்தவும், குளத்திலிருந்து பி.ஏ.பி., கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழி மற்றும் பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரை உடைப்பு, கீழ் மட்ட பாலம் பராமரிப்பு குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியும் காட்டாமல் கால்வாய் கரையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...