தூத்துக்குடியில் விஏஓ படுகொலை - தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மணல் கொள்ளை தொடர்பாக புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தாராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் முறப்பநாடு கோவில் பத்து என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

இவர் மணல் கடத்தியவர் மீது நடவடிக்கை எடுத்தபோது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் விவேக் முன்னிலை வகித்தார். அப்போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அஞ்சலி செலுத்தினர். அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது.

தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி தாசில்தார், சப்- கலெக்டர் என்ற அளவில் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வட்டத்தில் உள்ள 50 கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...