கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - கோவையில் 3 பேர் கைது!

கோவை வீரப்பனூர் அருகே இரு சக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவை - கேரளா எல்லையான வாளையார், மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, வேலந்தாவளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கிணத்துக்கடவு ஓலப்பதி சாலை வீரப்பகவுண்டனூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதேபகுதியில் தலா 75 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35), மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது41) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கோவையில் பல்வேறு பகுதிகளில் மலிவான விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரஜோஸ் என்பவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதையடுத்து மணிகண்டன், வெங்கடாஜலபதி, பிரஜோஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...