கோவையில் தந்தையை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் குடும்ப தகராறில்  தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கோவையில் தந்தையை கொன்ற வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் குமரவேல் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் குமரவேலை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிருஷ்ணனுக்கு குமரவேல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் குமரவேல் அவரது தந்தை கிருஷ்ணனை கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குமரவேலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் குமரவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...