கோவையில் இருசக்கர வாகன விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை சத்தி சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் நாகையைச் சேர்ந்த நாகேஸ்வரன் எனும் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாகப்பட்டினம் மாவட்டம் கமலா வீதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நாகேஸ்வரன் (வயது32). இவர் கோவை கோவில்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நாகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் சாலை கோவில்பாளையத்திலிருந்து குரும்பபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீசார், நாகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...