வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை - தாராபுரத்தில் பாமக சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமகவினர், 1000 தபால்களை தபால் நிலையம் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1,000 கடிதங்களை அனுப்பினர்.



இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...