காஷ்மீர் குண்டுவீச்சில் பலியான ராணுவ வீரர்கள் - கோவையில் அகில பாரத இந்து மகா சபா புஷ்பாஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை துடியலூரில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ட்ரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபா தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும் தென்மாநில இளைஞர் அணி செயலாளருமான டாக்டர் கே.ஆர். சுபாஷ் தலைமை தாங்கினார்.



இதில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களுக்கு ஒவ்வொருவராக மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனந்தன் , செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்திபன், மாநகர் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் கணேசன், அர்ச்சகர் பிரிவு மாநில செயலாளர் கார்த்தி சுவாமிகள், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், ஜெயகுமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...