கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய மர்மநபர்கள் - மடக்கிப்பிடித்து இளைஞர்கள் அதிரடி!

கோவை வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்துவந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களை, உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் மடக்கிப்பிடித்து, கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் எடுக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கேரளாவில் இருந்து எடுத்துவரப்படும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் அண்மைக்காலமாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக, கோவை வாளையாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பலமுறை எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.



இந்நிலையில், கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள், வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர். இதனைக் கண்ட உள்ளூர் இளைஞர்கள், அந்த நபர்களிடம் குறித்து கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர்.



இதையடுத்து, அந்த இளைஞர்கள், ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பதாகக்கூறி எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை அள்ளி ஆட்டோவில் திரும்ப எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...