துடியலூரில் செயின்பறிப்பு - இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸ்

கோவை துடியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி (வயது43).

இவர் கடந்த மார்ச் 20ஆம் தேதி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் துடியலூர் தனிப்படை போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த முருகானந்தம் (வயது26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் வேறு எங்காவது செயின் பறிப்பில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...