பல்லடம் அருகே பெய்த திடீர் மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 வீடுகள் முற்றிலுமாக சேதம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் திடீரென பெய்த மழையால் சுற்றுச்சுவர் 200 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள், 2 மாட்டு கொட்டகைகள் மற்றும் 5 கழிப்பறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே விற்பனைக்காக தனியார் வீட்டுமனை தயாராகி வருகிறது.



இதனிடையே அதை சுற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென பெய்த மழையில் வீட்டுமனைக்கு அருகே அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரானது சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.



இந்த சுற்றுச்சுவரானது, செட்டி என்ற மூதாட்டிக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்ததில் வீடு முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.



இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து கழிப்பறைகள், இரண்டு மாட்டு கொட்டகைகள் மற்றும் இரண்டு வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதமடைந்தன.

சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.



சிவராஜ், விநோத், ரங்கசாமி, பிரபாகரன், ரத்னா, ரமேஷ், கணேசன், தங்காள், சதீஷ், பொன்னுசாமி, அஞ்சனா ஆகியோரின் வீடுகளில் சூறாவளி காற்று சிக்கி மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.



மேலும் குடியிருப்புக்கு அருகே கட்டப்பட்டுள்ள சுற்று சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் பலமுறை வீட்டுமனை விற்பனையாளரிடம் தெரிவித்தும் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என‌ அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. வீதிகளிலேயே மின் கம்பிகள் தொங்கியபடி உள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பாதிப்பை சரி செய்ய வேண்டும். தங்க இடமில்லாமல் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...