பல்லடம் அருகே பெய்த திடீர் மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 வீடுகள் முற்றிலுமாக சேதம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் திடீரென பெய்த மழையால் சுற்றுச்சுவர் 200 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள், 2 மாட்டு கொட்டகைகள் மற்றும் 5 கழிப்பறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே விற்பனைக்காக தனியார் வீட்டுமனை தயாராகி வருகிறது.



இதனிடையே அதை சுற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென பெய்த மழையில் வீட்டுமனைக்கு அருகே அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரானது சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.



இந்த சுற்றுச்சுவரானது, செட்டி என்ற மூதாட்டிக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்ததில் வீடு முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.



இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து கழிப்பறைகள், இரண்டு மாட்டு கொட்டகைகள் மற்றும் இரண்டு வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதமடைந்தன.

சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.



சிவராஜ், விநோத், ரங்கசாமி, பிரபாகரன், ரத்னா, ரமேஷ், கணேசன், தங்காள், சதீஷ், பொன்னுசாமி, அஞ்சனா ஆகியோரின் வீடுகளில் சூறாவளி காற்று சிக்கி மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.



மேலும் குடியிருப்புக்கு அருகே கட்டப்பட்டுள்ள சுற்று சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் பலமுறை வீட்டுமனை விற்பனையாளரிடம் தெரிவித்தும் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என‌ அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. வீதிகளிலேயே மின் கம்பிகள் தொங்கியபடி உள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பாதிப்பை சரி செய்ய வேண்டும். தங்க இடமில்லாமல் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...