கோடை காலத்தை முன்னிட்டு உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம். அகலபாதையாக மாற்றப்பட்ட பின், தற்போது குறைந்த அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை பாலக்காடு மதுரை, திருச்செந்தூர், பாலக்காடு சென்னை, திருவனந்தபுரம், மதுரை செல்லும் ரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. உடுமலை பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிற்சாலை, நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்லவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் செல்ல போதுமான ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது இல்லை. அதனால், அவர்கள் அதிக செலவு செய்து பேருந்துகள், சொகுசு பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆகையால் கோடை விடுமுறை துவங்கும் நிலையில். மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்புவோர் தற்போது இயக்கப்படும் ரயில்களில் செல்வதில், மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே, பொதுமக்கள், வெளி மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில், கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூடுதல் ரயில் இயக்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

பொது மக்களும், பயணிகளும் அதிக அளவில் பயன்பெறுவார்கள். எனவே, உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, உடுமலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...