உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம், திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகம் தோப்பிற்குள் கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம், தென்னை மரங்கள் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானை கூட்டம் நீர் தேடி திருமூர்த்தி அணைப் பகுதியில் முகாமிட்டு உள்ளன.



இந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு, திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் மூன்று குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம், கம்பி வேலியை உடைத்து புகுந்துள்ளன.



அப்போது, அங்கிருந்த, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து, குருத்துக்களை சாப்பிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் கடந்த வாரம், ஐந்து தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இலங்கை அகதிகள் முகாம், பி.ஏ.பி., அலுவலகங்கள், குடியிருப்புகள், தென்னை வளர்ச்சி வாரியம், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் யானைக்கூட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், வன எல்லை பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க, அவற்றுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவும், கண்காணிக்கவும், 200 மீட்டர் நீளத்திற்கு அகழி, சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...