உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம், திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகம் தோப்பிற்குள் கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம், தென்னை மரங்கள் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானை கூட்டம் நீர் தேடி திருமூர்த்தி அணைப் பகுதியில் முகாமிட்டு உள்ளன.



இந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு, திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் மூன்று குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம், கம்பி வேலியை உடைத்து புகுந்துள்ளன.



அப்போது, அங்கிருந்த, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து, குருத்துக்களை சாப்பிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் கடந்த வாரம், ஐந்து தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இலங்கை அகதிகள் முகாம், பி.ஏ.பி., அலுவலகங்கள், குடியிருப்புகள், தென்னை வளர்ச்சி வாரியம், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் யானைக்கூட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், வன எல்லை பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க, அவற்றுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவும், கண்காணிக்கவும், 200 மீட்டர் நீளத்திற்கு அகழி, சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...