கோவை அருகே பக்தர்களின் வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டுயானை கூட்டம் - வைரலாகும் வீடியோ!

கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்றபோது, வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவர். சில சமயங்களில் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இரவு நேரங்களில் மலையேற கூடாது என தெரிவித்தால் இரவு முழுவதும் மலை அடிவாரத்திலேயே தங்கி விட்டு அதிகாலையில் மலையேறுவர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஜீப்பில் சிலர் சென்று கொண்டிருக்கையில், வழியில் இரண்டு குட்டியானைகளுடன் வந்த 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையில் வாகனங்களை வழிமறித்தவாறு நின்றது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் ஆங்கங்கே நின்றன.

வாகன ஓட்டிகளும் யானைகளுக்கு தொந்தரவு அளிக்காமல் இருக்க ஒலிபெருக்கிகளை எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.



சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானைகள் சாலையிலேயே நின்றுள்ளன. இதனையடுத்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனிடையே ஜீப்பில் இருந்த ஒருவர் அவரது செல்போனில் யானைகளை வழிமறித்து நின்றதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களிலும் பக்தர்கள் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்வதால் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க, வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...