தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி பொறுப்பாளர் ஆட்சியரிடம் மனு

அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி சார்பில் தாளத்துறை பொறுப்பாளர் ருக்மணி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...