சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் - ரூ.14.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.14.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.14.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம் இருந்து ரூ.14 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 28 அபராதம் வசூலிக்கப்பட்டது. 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை 1 லட்சத்து 93 ஆயி ரத்து 949 பேரிடமிருந்து ரூ.11 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 949 அபராதம் வசூலிக்கப்பட்டது.

2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது. 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 28 ஆயிரத்து 998 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 51 ஆயிரத்து 980 வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 558 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சேலம் கோட்டத்தில் 2022-2023 ஆண்டில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...