கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க 44 தள்ளு வண்டிகள் வழங்கல்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மைப்‌ பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளுக்கு குப்பை சேகரிப்பதற்கான தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கினா்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாயாளா்‌ க.சிவகுமார்‌, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



அதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூபாய்‌ 99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணியினை மேயர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.83 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ ஆய்வகம்‌ கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



மேலும்‌, அப்பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலுள்ள கழிப்பிடத்தை புனரமைத்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம்‌, மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்‌ காட்டுப்பள்ளிக்கூடம்‌ 33 சதவீதம்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 வகுப்பறைகளின்‌ மராமத்து பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...