உதகைக்கு வயது 200 - சாலையோரத்தில் கவரும் வண்ண ஓவியங்கள்!

உதகைக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதை முன்னிட்டு முக்கிய சாலை ஓரங்களில் வரையபட்டு வரும் வண்ண ஓவியங்கள் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



நீலகிரி: மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் சாலையோரங்களில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு ஜான் சலிவன் என்ற கோவை மாவட்ட ஆட்சியர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் உதகை நகரத்தையும் கட்டமைத்தார்.

அதன் பின்னர் தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் உருவாக்கபட்டு பிரபலமடைந்தது.

தற்போது ஆண்டிற்கு 30 லட்சம் பேர் சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் உதகை நகருக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதுள்ளது. அதனை தமிழக அரசு10 கோடி ஒதுக்கி அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது. மேலும் மே மாதம் நடைபெறும் நிறைவு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்.



இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் பாரம்பரிய சின்னங்களையும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை நகரில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணங்கள் பூசப்பட்டு அதில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது.



குறிப்பாக சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யானை, புலி, மான் வரையாடு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது.

அந்த வண்ண ஓவியங்களை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருவதால் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...