உதகைக்கு வயது 200 - சாலையோரத்தில் கவரும் வண்ண ஓவியங்கள்!

உதகைக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதை முன்னிட்டு முக்கிய சாலை ஓரங்களில் வரையபட்டு வரும் வண்ண ஓவியங்கள் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



நீலகிரி: மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் சாலையோரங்களில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையை 200 ஆண்டுகளுக்கு ஜான் சலிவன் என்ற கோவை மாவட்ட ஆட்சியர் வெளிஉலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் உதகை நகரத்தையும் கட்டமைத்தார்.

அதன் பின்னர் தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் உருவாக்கபட்டு பிரபலமடைந்தது.

தற்போது ஆண்டிற்கு 30 லட்சம் பேர் சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் உதகை நகருக்கு 200 ஆண்டுகள் நிறைவடைதுள்ளது. அதனை தமிழக அரசு10 கோடி ஒதுக்கி அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது. மேலும் மே மாதம் நடைபெறும் நிறைவு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்.



இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளையும், வனவிலங்குகளையும் பாரம்பரிய சின்னங்களையும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை நகரில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணங்கள் பூசப்பட்டு அதில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது.



குறிப்பாக சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யானை, புலி, மான் வரையாடு, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது.

அந்த வண்ண ஓவியங்களை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருவதால் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...