வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநிலத்தொழிலாளர் காயம் - கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அனில் ஓரான் என்ற வட மாநில தொழிலாளர் காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று 35 வது தேயிலை த்தோட்ட பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது லேசான காயங்களுடன் தப்பினார்.

இன்று அதே 35 வது தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளரான அனில் ஓரான் (வயது 26). இவரை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை காலில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.



அப்பகுதியில் ஆய்வுக்காக சென்றிருந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி சிறுத்தை தாக்கியவரை காப்பாற்றி, அவரது வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.



காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவும் ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அனில்ஓரான், கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆறு, சிறுகுன்றா நல்ல காத்து போன்ற எஸ்டேட் பகுதிகளில் பகுதிகளில் வால்பாறை பகுதியில் வளர்க்கப்படும் 100 க்கு மேற்பட்ட மாடுகள், தேயிலை த்தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அந்த மாடுகளை சிறுத்தைகள் வேட்டையாடுவதால், ஆங்காங்கே தேயிலை தோட்டத்தில் மாடுகள் இறந்து கிடக்கின்றன.

இதை, சிறுத்தை சாப்பிட வரும்பொழுது மனிதர்கள் அப்பகுதியில் வேலைக்கு வந்தால், அவர்களையும் சிறுத்தை தாக்குகிறது. இதனால், வீட்டில் வளர்க்கும் மாடுகளை தேயிலைத்தோட்டத்தில் விடாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...