கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் தற்கொலை - குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் விபரீதம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் ஆனந்த குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடிப்பழக்கத்தை நிறுத்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர், தோட்டத்து சாலையில் குடியிருந்து வந்தவர் ஆனந்தகுமார் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து செய்து வந்தார். இவருக்கு பாரதி (31) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால், நேற்று காலை ஆனந்தகுமார் மனைவி பாரதி குழந்தைகளுடன் கோவைக்கு சென்றார். வீட்டில் ஆனந்தகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கோவைக்கு சென்ற பாரதி வீட்டுக்குவந்து பார்த்தபோது ஆனந்தகுமார், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது மனைவி கொண்டு சென்றார்.

அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...