கோவையில் பர்னிச்சர் கடையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

கோவை ராம்நகரில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் தயாரிப்பு குடோன் உள்ளது.‌

இந்த பர்னிச்சர் குடோனில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் பணிகளை முடித்துக்கொண்டு குடோனை பூட்டி விட்டுச் சென்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அந்தக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை தெற்கு, வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிவராஜ், தனசேகர பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குடோனில் பற்றியெரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...