கோவையில் பர்னிச்சர் கடையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

கோவை ராம்நகரில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் தயாரிப்பு குடோன் உள்ளது.‌

இந்த பர்னிச்சர் குடோனில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் பணிகளை முடித்துக்கொண்டு குடோனை பூட்டி விட்டுச் சென்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அந்தக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை தெற்கு, வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிவராஜ், தனசேகர பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குடோனில் பற்றியெரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...