கிருஷ்ணகிரி ஆணவக்கொலையை கண்டித்து திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தந்தையே மகனை சாதி ஆணவக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருணாபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மகன் சுபாஷ் சாதி மறுத்து வேறு சாதியை சேர்ந்த காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சொந்த ஊர் சென்ற சுபாஷை அவரது தந்தை தண்டபாணி சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். உடன் வந்த அனுசுயாவையும் இதனை தடுத்த தண்டபாணியின் தாய் கண்ணம்மாவையும் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ், கண்ணம்மா உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் அனுசுயா மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...