கோவை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமிக்கப்பட்டார்.


கோவை: துடியலூர் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக ரத்தினகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சேரன் நகர், ஐ.டி.ஐ. இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ், வெள்ளக்கிணர், துடியலூர், விஸ்வநாதபுரம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பநாயக்கன்பாளையம், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளை காவல் எல்லையாகக் கொண்டு துடியலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

துடியலூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஞானசேகரன் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரத்தினகுமார் துடியலூர் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று துடியலூர் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் ரத்தினகுமார் அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இரத்தினக்குமர் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தெற்கில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...