கோவை அருகே மனைவி கொலை - காவல் நிலையத்தில் கணவன் சரண்!

கோவை சூலூரில் கணேசன் - நிவேதா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நிவேதாவை கொலை செய்து விட்டு கணேசன், சூலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேசன். இவர், நிவேதா (வயது24) என்ற பெண்ணை எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணேசன், மனைவி நிவேதாவை பல முறை எச்சரித்தும், அதை கேட்காமல் முருகனுடான உறவைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வேலை முடிந்து கணேசன் வீடு திரும்பியபோது, முருகனும் நிவேதாவும் தனிமையில் இருந்ததைப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எச்சரிக்கையையும் மீறி தவறு செய்த மனைவி நிவேதாவை, கணேசன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தினார்.

இதில், படுகாயமடைந்த நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.



அப்போது, நிவேதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிவேதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து மனைவியை கொலை செய்து விட்டு, சூலூர் காவல் நிலையத்தில் கணேசன் சரண் அடைந்தார். கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...