பல்லடம் பிரத்தியங்கரா தேவி கோயிலில் யாகக் குண்டம் - கூடைகூடையாய் வர மிளகாயைக் கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள உக்ர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகுபல யாக குண்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடை கூடையாக வரமிளகாய்களைக் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் உக்கிர பிரத்தியங்கரா தேவி திருக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு நிகுபல யாக பூஜை நடைபெற்றது.



இந்த யாகத்தில் காய்ந்த மிளகாய், பலகாரங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்து, கூடை கூடையாக யாக குண்டத்தில் கொட்டி வழிபாடு செய்தனர்.



இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் இருந்து, தீய சக்திகள், பில்லி -சூனியங்கள் விலகும் எனவும், தொழில் வளர்ச்சி, குழந்தையின்மை, திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை பிரத்தியங்கிரா தேவிக்கு படைத்து, பின்னர் யாக குண்டத்தில் கொட்டினர்.



பொள்ளாச்சி, நல்லூர், சோமனூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த யாகபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...