கோவை அருகே கத்தியால் குத்தி மனைவி கொடூரக்கொலை - தப்பியோடிய கணவனுக்கு போலீஸ் வலை

கோவை சூலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் தகாத உறவால் இந்தக் கொலை நடத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேசன்.



இவர், நிவேதா (வயது24) என்ற பெண்ணை எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணேசன், மனைவி நிவேதாவை பல முறை எச்சரித்தும், அதை கேட்காமல் முருகனுடான உறவைத் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வேலை முடிந்து கணேசன் வீடு திரும்பியபோது, முருகனும் நிவேதாவும் தனிமையில் இருந்ததைப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். எச்சரிக்கையையும் மீறி தவறு செய்த மனைவி நிவேதாவை, கணேசன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தினார்.

இதில், படுகாயமடைந்த நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.



அப்போது, நிவேதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிவேதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கணேசனைத் தேடிவருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...