திருப்பூரில் வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் காலில் கொலை மிரட்டல் - பரபரப்பு!

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கில் ஆஜராக கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இளம் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தொலைபேசி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் ஆனந்த் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண்ணில் இருந்து வாட்ஸப் காலில் வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும் மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய சக வழக்கறிஞர்களுடன் இணைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...