பல்லடம் அண்ணாமலையார் கோவிலில் மனமுருகி வேண்டும் சிறுவன் - வைரல் வீடியோ!

பல்லடம் அடுத்த இடுவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை மனமுருக வேண்டும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இடுவாய் அருகே அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் பாடி மனம் உருக வேண்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.



இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.



இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...