கோவையில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை துவங்கி வைத்த மேயர் கல்பனா!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி புனரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.35க்கு உட்பட்ட இடையர்பாளையம்‌, அன்புநகர்‌ 5வது வீதியில்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட உள்ள பால‌த்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, அண்ணா மார்க்கெட்‌ பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட‌ வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம்‌ சாலை, புதிய பேருந்து நிலையத்தில்‌ பயணிகள்‌ பயன்பாட்டிற்காக உள்ள கழிவறை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா, கழிவறையை சுகாதாரமாக பராமரித்திட சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, அம்மாசைகோனார்‌ வீதியில்‌ ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை அகற்ற பழுதடைந்த மழைநீர்‌ வடிகாலை புனரமைக்க மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த நிகழ்வுகளில், மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள்‌ சம்பத்‌, ராமமூர்த்தி, உதவி ஆணையர்‌ சேகா்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜீவராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...