கோவை சரவணம்பட்டியில் குடிபோதையில் காருக்குள்ளேயே உயிரிழந்த இளைஞர் - போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் மது போதையில் வசந்தகுமார் என்பவர் காருக்குள்ளேயே மூக்கில் ரத்தம் வழிந்தபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி அருகே கீரணத்தம் பகுதியில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தர்கள் வசந்தகுமார் - சுகந்தி தம்பதி. இந்நிலையில், வசந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் வசந்தகுமார் நண்பரை சந்தித்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், மனைவி சுகந்தி போன் செய்துள்ளார். ஆனால் வசந்தகுமார் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து தேடிச் சென்றுள்ளார். அப்போது கீரணத்தம் டாஸ்மாக் அருகே காருக்குள் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...