காந்திபுரம் மேம்பாலத்தில் கவிழ்ந்த தண்ணீர் லாரியால் பரபரப்பு!

கோவை காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததால் லாரியில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: காந்திபுரம் உயர்மட்ட மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய தண்ணி லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



கோவை காந்திபுரம் உயர் மட்டும் மேம்பாலம் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது இந்த மேம்பாலத்தில் சக்தி சாலையிலிருந்து அவிநாசி சாலையை நோக்கி வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி இறங்கும்போது பிரேக் பிடிக்காத காரணத்தினால் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது.



லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கார்த்தி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த அனைத்து தண்ணீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



சாலையில் இருந்து கீழே செல்லக்கூடிய வாகனங்கள் திடீரென லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.



லாரியின் உரிமையாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவரிடம் கேட்டபோது இன்று தான் புதிதாக ஓட்டுநர் கார்த்தி பணியில் சேர்ந்தார் என்றும், இரண்டு முறை கணபதி சாலையிலிருந்து பார்கேட் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிட்டு மூன்றாவது முறையாக தண்ணீர் கொண்டு வரும்போது வண்டி நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டதாகவும், ஓட்டுநர் கார்த்தியை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி விட்டதாக கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...