கோவை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ - 8வது நாளில் முழுமையாக அணைத்த வனத்துறை!

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை, வனத்துறையினரின் தொடர் போராட்டத்தால் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. புகை வரும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக காட்டுத் தீயை அணைக்க மதுக்கரை, கோவை, மேட்டுபாளையம், சிறுமுகை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டனர்.



கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...