மே.3-க்கு பின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சிஐடியு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் முடிவு!

திருப்பூரில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் மே.3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான நோட்டீஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர்: மே 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் பல்வேறு சிறப்புகளை உடையதாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ஒரு விதமாகவும் நடந்து கொள்வது ஒரு விதமாகவும் இருக்கிறது. இவை எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் தனியார்மயம் கொண்டு வரப்பட மாட்டாது என அறிவித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க இருக்கும் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள பண பலன்களை விடுவித்து ஊழியர்களுக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மூன்றாம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நோட்டீஸ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

15 நாட்களுக்குள் தொழிலாளர் துறையும் தமிழக அரசும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு காணப்பட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கையே திமுக அரசு பின்பற்றுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் மற்ற தொழிற்சங்கத்தினரும் இதற்கு முழு ஆதரவு அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...