கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் - மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை தெற்கு, மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.92க்கு உட்பட்ட செந்தமிழ்‌ நகர்‌ SBM திட்டத்தின் கீழ்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ மாநகராட்சி பொது கழிப்பிட கட்டுமான பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93க்கு உட்பட்ட இடையர்பாளையம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.5 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95க்குட்பட்ட என்‌.பி.இட்டேரி 9வது வீதி, மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.63.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.95க்கு உட்பட்ட என்‌.பி.இட்டேரி 9வது வீதியில்‌ புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில்‌ உள்ள அங்கன்வாடி மையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு குழந்தைகளுடன்‌ கலந்துரையாடினார்‌.



தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.77 சொக்கம்புதூர்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.32க்கு உட்பட்ட சங்கனூர்‌, ஆர்‌.ஜி.நகர்‌, தயிர்‌ இட்டேரி ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணவு ஏற்படுத்திட வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடாந்து, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.32க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, கண்ணப்பன்‌ நகர் ரயில்வே பாலத்தின்‌ கீழ்‌ பகுதியில்‌ சாலை ஓரங்களில்‌ கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் உடனடியாக குப்பைகளை அகற்றி, தெருக்களில்‌ கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும்‌, சாலையோரங்களில்‌ குப்பை கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கவும்‌, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...