கோவையில் பொது இடத்திலிருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது புகார்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பொது இடமான பூங்காவில் இருந்த 18 மரங்களை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வெட்டிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே பொது இடத்தில் இருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



ஜி.என்.மில்ஸ் அருகிலுள்ள சான்பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 25 தனித்தனி வீடுகள் உள்ளன.



மேலும் 50 சென்ட்டில் பார்க் அமைந்துள்ளது. இந்த பார்க்கில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த பார்க்கில் பெரியவர்கள், பெண்கள் வாக்கிங் போகவும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வெயில் காலம் என்பதால் இங்குள்ள மரங்கள் அங்குள்ளவர்களுக்கு இதமான சூழலை தருகின்றன.



இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் என்பவர் இன்று காலை பார்க்கிலுள்ள 18 மரங்களை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்தில் வெயில் காலத்தில் நிழல் தந்த 18 மரங்களை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...