பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கம்!

பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உட்மைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் நிதிஒதுக்கீடு செய்தார்.



இதனையடுத்து பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக கோவை சாலையில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.



3.2 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், 2 தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலூட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடையும் என நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...