திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் விஜிலா. இவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வியாளருக்கான சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் சேவை விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் விஜிலா. இவர், பல்வேறு பணியிடை பயிற்சிகளில், கருத்தாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆங்கில பாடத்துக்கான, கையேட்டினை வடிவமைத்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் தலைமை வகித்து விருது வழங்கினர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...