கோவை அருகே 7வது நாளாக எரியும் காட்டுத் தீ - மாலைக்குள் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை தகவல்

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் 7 ஆவது பற்றி எரியும் காட்டு தீ, இன்று மாலைக்குள் அணைக்கப்பட்டுவிடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 சதவீத தீ ஏற்கனவே அணைக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பரளவில் பற்றியெரிந்த தீயை அணைக்கும் பணியில், கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகத்தில் இருந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, அதிகளவு தீ பிடித்து எரிந்த 4 இடங்கள் முழுமையாக அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில், 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகொடிகள், முழுமையாக தீக்கு இரையாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கூடுதல் பணியாளர்களுடன் 7 ஆவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...