வால்பாறை அருகே காட்டுத் தீ - மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை அருகே அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் காடுகளில் தண்ணீர் வறண்டு, மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து,காடுகள் வறட்சியாக காணப்படுகிறது.



வனத்துறையினர் காட்டு தீ ஏற்படாத வண்ணம்பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாட்டுப்பாறை வனப்பகுதிக்குள் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



சுமார் 7 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ நள்ளிரவுவரை வனப்பகுதியில் பரவியதில் அங்கிருந்த புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலகின. வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும் பொள்ளாச்சி வனத்துறையினர் சார்பாகவும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனவர்கள் காட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எவ்வாறு தீ பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...