வால்பாறை அருகே காட்டுத் தீ - மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை அருகே அட்டகட்டி வரையாட்டு பாறை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் காடுகளில் தண்ணீர் வறண்டு, மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து,காடுகள் வறட்சியாக காணப்படுகிறது.



வனத்துறையினர் காட்டு தீ ஏற்படாத வண்ணம்பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி பகுதியில் உள்ள வரையாட்டுப்பாறை வனப்பகுதிக்குள் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.



சுமார் 7 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ நள்ளிரவுவரை வனப்பகுதியில் பரவியதில் அங்கிருந்த புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலகின. வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலும் பொள்ளாச்சி வனத்துறையினர் சார்பாகவும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனவர்கள் காட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எவ்வாறு தீ பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...