பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சீருடை அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக நடந்து வந்தனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பைவ் கார்னர், மகாலிங்கபுரம் ரவுண்டானா, கோவை சாலை வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து புதிய திட்டை சாலை வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது.



இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக கம்பிரமாக நடந்துவந்தனர்.



அப்போது, பேரணியுடன் வந்த ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.



இந்த பேரணியில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



இந்தப் பேரணியையொட்டி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...