பல்லடத்தில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி - பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: பல்லடத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைமையில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பல்லடத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



வடுகபாளையம் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வழியாக கொசவம்பாளையம் சாலை பிரிவு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரை பேரணி நடைபெற்றது.



மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பேரணியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.



இதைத் தொடர்ந்து, கொசவம்பாளையம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்தப் பேரணியையொட்டி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, அம்பேத்கர் ஜெயந்தி விழா, தமிழ் வருடப்பிறப்பு, வீரசிவாஜியின் 350வது பிறந்தநாள், வள்ளலாரின் 200 வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிறுத்தியும், பொதுமக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பேரணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...