உடுமலையில் கடும் வெயில் எதிரொலி..! - இளநீர் விலை ரூ.40 ஆக உயர்வு!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் இளநீர் விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தகவல்.


திருப்பூர்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் விலை ரூ,40 க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.



இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.

இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...