வால்பாறையில் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்!

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகள் வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி வால்பாறையில் மூன்று இடங்களில் காலை சிற்றுண்டி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வால்பாறை பத்தாவது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 36 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில், நகர கழக செயலாளர் குட்டி (எ) சுதாகர், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.சா. செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் காமாட்சி, கோழிக்கடை கணேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை கணேசன், மாவட்ட கழக துணை செயளாலர் ஈ.கா.சி பொன்னுச்சாமி,நகரக் கழக நிர்வாகிகள் சரவணபாண்டியன், டென்சிங்,நகர மன்ற உறுப்பினர்கள் JBR. பாஸ்கர், R.ரவிச்சந்திரன், GKM.மகுடீஸ்வரன், மற்றும் பழக்கடை செல்வம், மணிக்குமார் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...