உடுமலை தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் விழா அனுசரிப்பு!

உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில், நடைபெற்ற தீ தொண்டு நாள் வார விழாவில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட தீயணைப்பு துறையினர், தீவிபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


திருப்பூர்: உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகை பிடிக்க கூடாது.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...