கோவை அருகே 6வது நாளாக எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

கோவை மாவட்டம் நாதே கவுண்டன்புதூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றிய காட்டுத் தீ 6 வது நாளாக எரிந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வரும் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: ஆலாந்துறை அருகே தொடர்ச்சி மலையில் 6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன் புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்து, தீயை அணைக்க வனத்துறையினரிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருந்தபோதும், காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்படாமல் இருந்து வருகிறது.



இந்த நிலையில், 6வது நாளான இன்று சூலூர் விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு வருகிறார்.

மேலும், மாவட்ட வன அலுவலர்களும் உடனிருக்கின்றனர். ஆறு நாட்களாக பற்றியெரிந்து வரும் காட்டு தீ இன்றுடன் அணைக்கப்பட்டு விடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...