கோவை அருகே 6வது நாளாக எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

கோவை மாவட்டம் நாதே கவுண்டன்புதூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றிய காட்டுத் தீ 6 வது நாளாக எரிந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வரும் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: ஆலாந்துறை அருகே தொடர்ச்சி மலையில் 6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன் புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்து, தீயை அணைக்க வனத்துறையினரிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இருந்தபோதும், காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்படாமல் இருந்து வருகிறது.



இந்த நிலையில், 6வது நாளான இன்று சூலூர் விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு வருகிறார்.

மேலும், மாவட்ட வன அலுவலர்களும் உடனிருக்கின்றனர். ஆறு நாட்களாக பற்றியெரிந்து வரும் காட்டு தீ இன்றுடன் அணைக்கப்பட்டு விடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...