உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் - போலீசார் தடுத்ததால் பரபரப்பு!

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.



இதற்கு கண்டனம் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



நகராட்சி பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர், ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.



அப்போது, அவர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கே .தென்னரசு மாவட்டத் தலைவர், கோவிந்தராஜ், ஜனார்த்தனன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம், மாநில பொது குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி, கே.கண்ணுசாமி, ஆர் முருகானந்தம், நகரத் தலைவர் கோ. ரவி,துணைத் தலைவர் ஆர் முத்துக்குமார், வட்டார தலைவர்கள் கனகராஜன், ஏ எஸ் வெங்கடேஷ்,பி. செல்லகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் சின்னச்சாமி, குடந்தை கண்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...